ஆற்காடு சார் பதிவாளர் கொரோனாவுக்கு பலி!

 

ஆற்காடு சார் பதிவாளர் கொரோனாவுக்கு பலி!

ராணிப்பேட்டை

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆற்காடு சார் பதிவாளர் அன்பு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அன்பு(48). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பத்திரப் பதிவு அலுவலகத்தில், கடந்த 3 ஆண்டுகளாக சார் பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அன்புவிற்கு கடந்த மே மாதம் 8ஆம் தேதி திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

ஆற்காடு சார் பதிவாளர் கொரோனாவுக்கு பலி!

இதனையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அன்புவிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவுக்கு சார் பதிவாளர் உயிரிழந்த சம்பவம் ஆற்காடு பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.