வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி – அதானு தாஸ் திருமணம் ஜூன் 30-இல் நடைபெறுகிறது

 

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி – அதானு தாஸ் திருமணம் ஜூன் 30-இல் நடைபெறுகிறது

கொல்கத்தா: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி – அதானு தாஸ் திருமணம் ஜூன் 30-இல் நடைபெறுகிறது.

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி மற்றும் இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ்…இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் இந்தாண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் உலகம் முழுக்க கொரோனா பரவல் அதிகரித்ததால் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி – அதானு தாஸ் திருமணம் ஜூன் 30-இல் நடைபெறுகிறது

இதனால் இவ்விருவரும் நாளை மறுநாள் (ஜூன் 30) குறைவான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களது திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு வருபவர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் மற்றும் இன்னொரு 50 பேர் என இரண்டு பகுதிகளாக விருந்தினர்கள் பிரிக்கப்பட்டு இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.