நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : தேர்தல் அதிகாரி ஆலோசனை !

 

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : தேர்தல் அதிகாரி ஆலோசனை !

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். அத்துடன் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ,நீக்க, திருத்தம் செய்ய வாக்காளர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்தார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : தேர்தல் அதிகாரி ஆலோசனை !

மேலும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் குறித்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12 , 13 தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏற்படுத்தப்படும். இந்த வாக்காளர் பட்டியலில் மீதான நடவடிக்கை ஜனவரிக்குள் எடுக்கப்படும் என்றும் ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : தேர்தல் அதிகாரி ஆலோசனை !

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.