“ஈரோடு மாவட்டத்தில் 545 கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமனம்” – எஸ்.பி. தங்கதுரை தகவல்

 

“ஈரோடு மாவட்டத்தில் 545 கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமனம்” – எஸ்.பி. தங்கதுரை தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டடம் முழுவதும் 545 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தெரிவித்தார். ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.பி., தங்கதுரை, இந்த திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பெயர் பலகையை திறந்து வைத்தார்.

“ஈரோடு மாவட்டத்தில் 545 கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமனம்” – எஸ்.பி. தங்கதுரை தகவல்

தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் இடையே உரையாற்றிய அவர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தவும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாகவும் இந்த கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் செயல்படுவார்கள் என கூறினார். மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 விழிப்புணர்வு காவல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், இவர்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு சேகரிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினர். மேலும், குடும்ப பிரச்சனை, நிலத்தகராறு, செக் மோசடி என அனைத்து விதமான புகார்கள் குறித்து விழிப்புணர்வு காவலருக்கு வாட்ஸ்அப் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.