அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் சட்டம் பயில வேண்டுமா? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

 

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் சட்டம் பயில வேண்டுமா? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 4 மாதங்களாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமெஸ்டர்  தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில் இறுதியாண்டு  தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆன்லைன் சேர்க்கை தொடங்கி முடிந்துள்ளது.

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் சட்டம் பயில வேண்டுமா? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு வரும் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tndalu.ac.in என்ற தளத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு அக்டோபர் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.