சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்- குவிந்த பெண்கள்

 

சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்- குவிந்த பெண்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய, கடைசி நாள் என்பதால் எராளமான பெண்கள் குவிந்தனர்.

சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்- குவிந்த பெண்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 49 சத்துணவு அமைப்பாளர்,உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்வதற்காக நேற்று வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வந்தனர். இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை கொடுக்க வந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பகளை வழங்கினர்.

சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்- குவிந்த பெண்கள்

சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிக்கு கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு என்கிற நிலையில், பட்டதாரிகள், பொறியாளர்கள் வரை விண்ணப்பம் செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்- குவிந்த பெண்கள்