கொரோனா அதிகரிப்பு: அமெரிக்காவில் மீண்டும் தற்காலிகமாக மூடப்படும் ஆப்பிள் ஸ்டோர்கள்

 

கொரோனா அதிகரிப்பு: அமெரிக்காவில் மீண்டும் தற்காலிகமாக மூடப்படும் ஆப்பிள் ஸ்டோர்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்குள்ள சில ஸ்டோர்களை மீண்டும் ஆப்பிள் நிறுவனம் மூடியுள்ளது.

கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 705 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்குள்ள சில ஸ்டோர்களை மீண்டும் ஆப்பிள் நிறுவனம் மூடியுள்ளது. அதன்படி ஃபுளோரிடா, அரிசோனா, தெற்கு கரோலினா மற்றும் வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் மீண்டும் மூடப்பட்டன. அதாவது 11 ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.