உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்க! – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கடிதம்

 

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்க! – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கடிதம்

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று கூறப்பட்டவர்களை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்க! – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கடிதம்

அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ மாநிலச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்க! – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கடிதம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், “சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் கௌசல்யா தம்பதியினருக்கு, கௌசல்யா பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்க! – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கடிதம்
இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 22-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, மீதமுள்ள ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்க! – முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கடிதம்

இத்தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு இதுவரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதோடு, மேலும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விடும். எனவே, தமிழக அரசு தாமதமில்லாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், உரிய வாதங்களை எடுத்து வைத்து குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.