சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

 

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். ஸ்டாலின் பதவியேற்று அதே நாளில் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வாகினர். ஜூன் 21-ஆம் தேதி தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக கலைவாணர் அரங்கில் நேரில் சென்று சபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆளுநரை சபாநாயகர் சட்டபேரவைக்கு அழைப்பது வழக்கம். அதன் படி, ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத் தொடரை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அது நிறைவேற்றப்படும். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் பேச நேரம் ஒதுக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்து 21ம் தேதி நடைபெறும் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.