ஆதாரங்கள் இருந்தால் யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி!

 

ஆதாரங்கள் இருந்தால் யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணுடைய கணவரின் உறவினர்களான பூங்கனி, குரு பாண்டியன் மற்றும் தாமரைச் செல்வி ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கோரி, பெண்ணின் தாய் மனு தாக்கல் செய்திருந்தார்.

Madras High Court - Wikipedia

இந்த மனுவை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம், மூன்று பேரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பூங்கனி உள்ளிட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளது என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் விசாரணை எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.