கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சியே: அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி

 

கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சியே: அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதனால் இனி தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சியே: அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி

அண்மைக்காலமாக விநாயகர் சிலை, இ-பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்னை நீடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி தொடரும் என முதல்வர் பழனிசாமியும் பாஜக தலைவர் எல்.முருகனும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சியே: அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, “2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும். கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.