குழந்தைக்கு அப்பாவான விராட் கோலி – ’மகிழ்ச்சி’ ட்வீட்!

 

குழந்தைக்கு அப்பாவான விராட் கோலி – ’மகிழ்ச்சி’ ட்வீட்!

இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.

குழந்தைக்கு அப்பாவான விராட் கோலி – ’மகிழ்ச்சி’ ட்வீட்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எங்களுக்குப் பெண் குழந்தை இன்று மதியம் பிறந்தது. இதனை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைக்கிறேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமுடன் உள்ளார்கள். எங்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக ஒரு ட்வீட்டின் மூலமே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளி உலகுக்கு தெரிவித்திருந்தார். அதில், தங்களுக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தை பிறப்பின் காரணமாக மனைவியுடன் இருப்பதற்காக கோலி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளமால் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

கோலி இந்த அறிவிப்பை வெளியிட்ட போது பலரும் நாட்டிற்காக விளையாடமல், இந்தியா வந்துவிட்டதாக திட்டி தீர்த்தனர். இன்று தான் சிட்னியில் டெஸ்ட் போட்டி நடந்துமுடிந்தது. ஒருவேளை அவர் போட்டியில் இருந்தால் கவனம் செலுத்தியிருக்க முடியுமா?

கிரிக்கெட் வீரர்களுக்கும் உணர்வுகள் இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிசிசிஐ தனியார் நிறுவனமே அன்றி, அது அரசு நிறுவனம் அல்ல என்பது கொசுறு தகவல். இதன்மூலம் இந்திய கிரிக்கெட்டில் ஆடுவதும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.