2 வருஷம் ஆயிட்டு… 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்து .. மத்திய அரசு தகவல்

 

2 வருஷம்  ஆயிட்டு… 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்து .. மத்திய அரசு தகவல்

கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்ட அச்சடிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்து இருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2018 மார்ச் 30ம் தேதி நிலவரப்படி நம் நாட்டில் 336.2 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. 2021 பிப்ரவரி 26ம் தேதி நிலவரப்படி இது 249.9 கோடியாக குறைந்துள்ளது.

2 வருஷம்  ஆயிட்டு… 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்து .. மத்திய அரசு தகவல்
அனுராக் தாக்கூர்

குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்துதான் மத்திய அரசு முடிவு எடுக்கும். 2016-17ம் நிதியாண்டில் (2016 ஏப்ரல்- 2017 மார்ச்) 354.29 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. 2017-18ம் நிதியாண்டில் 11.15 கோடி 2 ஆயிரம் நோட்டு மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்டது. இது 2018-19ம் நிதியாண்டில் 4.66 கோடியாக குறைந்தது.

2 வருஷம்  ஆயிட்டு… 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்து .. மத்திய அரசு தகவல்
இந்திய ரிசர்வ் வங்கி

அது முதல் (2019 ஏப்ரல் முதல்) கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் நோட்டு புதிதாக அச்சடிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2 ஆயிரம் நோட்டு அச்சடிக்காமல் இருப்பது, அதிக மதிப்பிலான பணத்தை கருப்பு பணமாக பதுக்கப்படுவதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.