பெயர் மட்டும்தான் அப்படி… ஆனால் தாய் பாசத்தை நாம் பார்க்க முடியாது.. மம்தாவை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

 

பெயர் மட்டும்தான் அப்படி… ஆனால் தாய் பாசத்தை நாம் பார்க்க முடியாது.. மம்தாவை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பெயர் மட்டும்தான் அப்படி ஆனால் தாய் பாசத்தை நாம் பார்க்க முடியாது என்று மம்தா பானர்ஜியை பா.ஜ.க. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கினார்.

பா.ஜ.க.வின் அனுராக் தாகூர் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு, மம்தா பானர்ஜி விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக செய்தியாளர் அனுராக் தாக்கூரிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் கூறியதாவது: இது (தலைவர் தேர்தல்) காங்கிரசின் உள்விவகாரம். விரும்பும் யாரையும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது.

பெயர் மட்டும்தான் அப்படி… ஆனால் தாய் பாசத்தை நாம் பார்க்க முடியாது.. மம்தாவை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்
அனுராக் தாக்கூர்

அவர்கள் தலைவரை தேர்ந்தெடுத்தாலோ அல்லது தலைவர் இல்லாமல் இருந்தாலோ அந்த கட்சியின் செயல்திறன் மாறபோவதில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியின் படகு (கட்சி) தற்போது மூழ்க போகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஓட்டையாக விழுந்து கொண்டு இருக்கிறது. அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கொண்டு இருக்கின்றனர்.

பெயர் மட்டும்தான் அப்படி… ஆனால் தாய் பாசத்தை நாம் பார்க்க முடியாது.. மம்தாவை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்
காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தற்போது மம்தாவை நம்பவில்லை ஏனென்றால் அவர் மிரட்டல்கள் மூலம் ஆட்சியை நடத்துகிறார். அவரது பெயர்தான் மம்தா. ஆனால் அவரிடம் எந்த தாய் பாசத்தை நாம் பார்க்க முடியாது. அவரது அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது. இதற்கு, அவரது கட்சி தொண்டர்களும், மாநில மக்களும் அவரிடம் அதிருப்தியாக இருப்பதே காரணம். அவரது படகு இப்போது மூழ்க போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.