திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

 

திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

நாமக்கல்

திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

இதன் பேரில், டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.