சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலை விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…

 

சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலை விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…

விருதுநகர்

சிவகாசி அருகே காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த காளையார்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில், கடந்த 25ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலை விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…

மேலும், படுகாயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி காளையார்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் இன்று உயிரிழந்தார்.

இதனால், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது.