உத்தர பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பெண்கள்….ஹத்ராஸ் சம்பவத்தை போன்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொடூரம்

 

உத்தர பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பெண்கள்….ஹத்ராஸ் சம்பவத்தை போன்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொடூரம்

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது போல், பல்ராம்பூரிலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். மேலும் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயத தலித் பெண் சிகிச்சை பலன இன்றி மருத்துவமனையில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் அந்த மாநிலத்தில் ஹத்ராஸ் பெண்ணுக்கு நேர்ந்தது போலவே மற்றொரு பெண்ணுக்கும் நேர்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பெண்கள்….ஹத்ராஸ் சம்பவத்தை போன்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொடூரம்
எஸ்.பி. தேவ் ரஞ்சன்

பல்ராம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயதான பெண் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வழக்கம் போல் மாலை திரும்பி வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் பதற்றத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தாமதமாக ரிக்ஷாவில் வந்துள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் அந்த பெண் வயிறு தீயாக வலிப்பதாக கூறியுள்ளாள். இதனையடுத்து அந்த பெண் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். ஆனால் அந்த பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதால் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

உத்தர பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பெண்கள்….ஹத்ராஸ் சம்பவத்தை போன்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொடூரம்
கைது

அந்த பெண்ணின் பெற்றோர் உடனடியாக தனது மகளை லக்னோவுக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண் இறந்து விட்டாள். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் தன் மகள் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக பல்ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ் ரஞ்சன் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தனது மகளை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் மைனர் என தெரிவித்தார். ஹத்ராஸ் பெண்ணுக்கு நேர்ந்தது போலவே, இந்த பெண்ணின் முதுகு மற்றும் கால்களை பாலியல் பலாத்காரர்கள் செய்தவர்கள் உடைத்துள்ளனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன் குற்றவாளிகள் அந்த பெண்ணின் உடலில் போதை மருந்தை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.