கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பலியான மற்றுமொரு போலீஸ் அதிகாரி!

 

கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பலியான மற்றுமொரு போலீஸ் அதிகாரி!

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கொரோனவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

 

கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பலியான மற்றுமொரு போலீஸ் அதிகாரி!

தற்போது, மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 40 வயது தலைமை காவலர் ஒருவர் சேத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.