குஷ்பு மீது மதுரையில் மற்றொரு புகார்!

 

குஷ்பு மீது மதுரையில் மற்றொரு புகார்!

குஷ்பு மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சி எனக் கூறினார்.

குஷ்பு மீது மதுரையில் மற்றொரு புகார்!

மாற்றுத்திறனாளிகள் பற்றிய தனது கருத்துக்கு வருத்தமும் மறுப்பும் இதுவரை குஷ்பு தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் குஷ்பு மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.