தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன!

 

தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,849 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 89,561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன!

கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள RT – PCR சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன!

இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன. 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்த நிலையில் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் தென்கொரிய நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்று இரவு 7 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. ஏற்கனவே 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.