வேலூரில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது!

 

வேலூரில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது

வேலூரில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது!

நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது!

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.