செங்கல்பட்டில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

 

செங்கல்பட்டில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது

செங்கல்பட்டில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும் 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 9,021ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,170 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,561 ஆகவும் உள்ளது. மேலும் செங்கல்பட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.