வேலூரில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று!

 

வேலூரில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று!

நேற்று மட்டும் 65பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் வேலூரில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்ந்துள்ளது.