தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு -மாபா பாண்டியராஜன் பரபரப்பு

 

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு -மாபா பாண்டியராஜன் பரபரப்பு

தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் தனது தொழிலை முழுமூச்சாக கவனிக்க முடிவு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு -மாபா பாண்டியராஜன் பரபரப்பு

மாஃபா எனும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாண்டியராஜன். பாஜக , தேமுதிக, அதிமுக என்று அடுத்தடுத்த அரசியல் பயணங்களில் கவனம் செலுத்தி வந்தவர், தீவிர அரசியலில் இறங்கியதால் அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாண்டியராஜன், கட்சியினரின் உள்ளடி வேலைகளால்தான் தோல்வி அடைந்ததாக கடும் அதிருப்தியில் இருந்தார்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு -மாபா பாண்டியராஜன் பரபரப்பு

இந்நிலையில் அவர் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி மீண்டும் தனது தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

தீவிர அரசியலுக்கு வந்ததால் மாஃபா மற்றும் சி.எல். மனிதவள நிறுவனத்தின் பொறுப்புகளை தனது மனைவி மற்றும் பிறரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது மீண்டும் மாபா- சி.எல். நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். இந்தியாவில் 40 இடங்களில் 56 அலுவலகங்களை கொண்டு இயங்கும் சி.எல். குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாண்டியராஜன், ‘’ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது மாஃபா நிறுவனம். தீவிர அரசியலில் ஈடுபட்டதால் தொழிலை கவனிக்க முடியவில்லை. தற்போது மீண்டும் தொழிலை கவனிக்க முடிவெடுத்துள்ளேன். இதற்காக தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு -மாபா பாண்டியராஜன் பரபரப்பு

முழுவதுமாக அரசியலை விட்டு நான் விலகவில்லை. அதிமுகவின் பொறுப்புகளை(கொள்கை பரப்பு துணை செயலாளர்) தொடர்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் அவர் தொழில்துறைக்கு திரும்பியிருப்பதை வரவேற்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.