சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்கள் அறிவிப்பு!

 

சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்கள் அறிவிப்பு!

சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்கள் பட்டியல் இன்று கூட்டத்தொடரின் போது சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்கள் அறிவிப்பு!

16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரை நடைபெற்றது. இதை தொடர்ந்து 24 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என்றும் ஆளுநர் விவாதம் மீது முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி பதில் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் 2வது நாளான இன்று தொடங்கியது. முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா, சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்கள் அறிவிப்பு!

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர். ராஜா, டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்று தலைவர்களாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.சபாநாயகர் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் தமிழகத்தில் அவையை நடத்த உள்ள மாற்று தலைவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.