அண்ணாத்த ஷூட்டிங் ஸ்டார்ட்..! ரசிகர்களுக்கு ”டபுள் ட்ரீட்” கொடுக்க ரஜினி ரெடி.!?

 

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்டார்ட்..! ரசிகர்களுக்கு ”டபுள் ட்ரீட்” கொடுக்க ரஜினி ரெடி.!?

டிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்பது விக்கிரமாதித்தன்- வேதாளம் கதையாக நீண்ட நிலையில், வரும் தேர்தலில் நிச்சயமும் அவரது வருகை இருக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அவரது பிரவேசம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்டார்ட்..! ரசிகர்களுக்கு ”டபுள் ட்ரீட்” கொடுக்க ரஜினி ரெடி.!?


அவ்வப்போது சில எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு, ஒதுங்கி இருந்த ரஜினி, திரைமறைவாக சில காய்களை நகர்த்தி வந்தார். மக்கள் மன்றம் உருவாக்கியது, ரசிகர்களிடம் கருத்து கேட்டது, பின்னர் அரசியல் எழுச்சி வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றெதெல்லாம அதன் சக திட்டங்கள்தான்.


தான் நேரடியாக ஆட்சியில் இடம்பெற மாட்டேன் என்றும், முதலமைச்சர் வேட்பாளரை அடையாளம் காட்டுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில்தான் கொரோனா தொற்று எல்லோரையும் முடக்கி வைத்தது.

கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களாக போயஸ்கார்டனிலும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலுமாக இருந்த ரஜினி, வெளிநபர்கள் யாரையும் பார்க்காமல் தவிர்த்து வந்தார். லம்போகினி காரில் சென்றது, இ-பாஸ் விவகாரம் ஆகியவற்றில் மட்டும் அடிபட்டார். அதற்கு முன்னர் கொரோனா களப்பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி நின்றபோது மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்தார். அத்தோடு சரி. அதன்பிறகு, எங்கும் வெளியே செல்வதை தவிர்த்தே வந்தார்.

படப்பிடிப்புக்கும் நோ..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அண்ணாத்தே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா அச்சம் காரணமான நிறுத்தப்பட்டிருந்தது. அந்த படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருந்து. அந்த பட வேலைகளை முடித்துவிட்டு அரசியலில் தீவிரமாக களமிறங்க ரஜினி திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், ரிலீஸ் தேதியை மாற்றிய சன்பிக்சர்ஸ், அண்ணாத்தே படம் 2021 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்டார்ட்..! ரசிகர்களுக்கு ”டபுள் ட்ரீட்” கொடுக்க ரஜினி ரெடி.!?

அறிவித்தது. இதற்கு ரஜினி தரப்பில் இருந்து சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
கொரோனா தொற்று தணியும் வரை, குறிப்பாக டிசம்பர் வரை வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருந்தாராம். படத்தில் இதர போர்ஷன்களை எடுத்தாலும், தனது போர்ஷனை டிசம்பரில் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியதால், அண்ணாத்தே அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என உறுதியானது.

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்டார்ட்..! ரசிகர்களுக்கு ”டபுள் ட்ரீட்” கொடுக்க ரஜினி ரெடி.!?

இந்த நிலையில், ரஜினி தரப்பில் இருந்து படக்குழுவுக்கு அழைப்பு சென்றுள்ளதாம், நவம்பர் மாதத்துக்குள் தனக்கான போர்ஷனை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளதாம். இதன்மூலம் அவர் ஏற்கெனவே திட்டமிருந்தபடி, டிசம்பர் மாதத்தில் அரசியல் களம் காண உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்டார்ட்..! ரசிகர்களுக்கு ”டபுள் ட்ரீட்” கொடுக்க ரஜினி ரெடி.!?


தற்போது படப்பிடிப்புகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக அண்ணாத்தே பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அண்ணாத்தே ஷூட்டிங் முடிந்ததும், அவரது அரசியல் கட்சி அறிவிப்பு இருக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருவாரா, வரமாட்டாரா என சந்தேகத்துடன் கவனித்து வந்தவர்கள், டிசம்பரில் அவரது அரசியல் ஆட்டத்தை பார்க்க உள்ளதாக ரசிகர்கள் இப்போதே உற்சாகம் அடைந்துள்ளனர்.