ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்!

 

ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்!

நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.

ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. நீண்ட காலத்திற்கு பின் அவருடைய அண்ணாத்த படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வீடியோ’ வெளியானது. இதனை கொண்டாடும் விதமாக திருச்சியில், ரஜினியில் ரசிகர்கள் சிலர், ஆட்டை பலி கொடுத்து கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் கட் அவுட் முன் ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய், தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.