“நான் மிரட்டல் விடுத்ததால் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்” – மீண்டும் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

 

“நான் மிரட்டல் விடுத்ததால் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்” – மீண்டும் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அண்ணாமலை, ‘தூக்கி போட்டு அடித்தால் பல்லு கில்லு எல்லாம் உடைந்து விடும்’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுத்தது சர்ச்சையைக் கிளப்பியது. அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையைக் கிளப்ப தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

“நான் மிரட்டல் விடுத்ததால் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்” – மீண்டும் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

இதற்கு நடுவே திமுக எம்பி கனிமொழி அண்ணாமலையைக் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இதுதொடர்பாகப் பேசிய அவர், ”எனக்கு இன்னொரு முகம் இருக்கு; அதைக் காட்ட வேண்டாம்னு நினைக்கிறேனு அண்ணாமலை சொல்றார். செந்தில் பாலாஜியைப் போட்டு அடிச்சுருவேனு பேசுறார். இப்படிப்பட்ட நபர்கள் எல்லாம் ஆட்சிக்கு வர வேண்டுமா? நீ தொட்டு பாரு தம்பி. திமுககாரர் மேல கைவச்சு பாரு. உங்கள மாதிரி எத்தனை பேர பாத்துட்டு வந்திருப்போம். நாங்கள் எழுந்து நின்னோம்னா தாங்க மாட்டீங்க” என்றார்.

“நான் மிரட்டல் விடுத்ததால் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்” – மீண்டும் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

தற்போது இதற்கு அண்ணாமலை எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் பேசுகையில், “திமுக அராஜகம் செய்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நான் என்ன சொன்னேன் என்றால், தொடர்ந்து பாஜக பிரச்சார வாகனத்தின் மீது கல் எறிவது, தொண்டர்களைத் தாக்குவது என செந்தில்பாலாஜியின் நடவடிக்கையை எதிர்த்துத் தான் பேசியிருந்தேன். நான் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் செந்தில்பாலாஜி பல பேருக்கு கொலை மிரட்டல் விடுத்தது வருகிறார். இது வரைக்கும் மற்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது வந்த செந்தில்பாலாஜிக்கு கடைசியாக நான் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். அவர் பயந்துவிட்டார்” என்றார்.