கே.எஸ்.அழகிரி கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார் – அண்ணாமலை காட்டம்!

 

கே.எஸ்.அழகிரி கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார் – அண்ணாமலை காட்டம்!

பாஜகவின் போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் கே.எஸ்.அழகிரி கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கே.எஸ்.அழகிரி கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார் – அண்ணாமலை காட்டம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பாஜக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, மது விற்பனைக்காக கூட்டத்தை கூட்டம் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டத்தை ஒரு முறையாவது கூட்டியுள்ளதா?. சாராயத் துறை அமைச்சரை பக்கத்தில் வைத்துக்கொண்டு விவசாயத் துறை அமைச்சரை தூரமாக வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பாஜகவின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவுக்கு வயிற்றில் பிரச்சினை இருப்பதாக கோழைத்தனமாகவும் கேவலமாகவும் கே.எஸ் அழகிரி பேசுகிறார். கட்சியை விட்டு செல்ல அவருக்கு நேரம் வந்துவிட்டது என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கமல்ஹாசன் உடன் இருந்தவர்கள் எல்லோரும் வெளியே போய் விட்டனர். அவர் மட்டுமே கட்சியில் இருக்கிறார். பாஜகவை கொச்சைப் படுத்தினால் அவர்களது அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக பாஜக கண்டிப்பாக எதிர்க்கும். மோடி ஆட்சிக்கு வந்து ஒரு விவசாயி கூட பட்டினியால் சாகவில்லை. போராட்டத்திற்கு வந்திருக்கும் யாரும் பிரியாணிக்காக வரவில்லை. அனைவரும் விவசாயிகளுக்காக வந்துள்ளனர் என்றார். மேலும், பாஜகவை யாராவது கொச்சைப்படுத்தி பேசினால் அவர்களை விட மாட்டோம். அவர்களின் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடி கொடுப்போம் என்று அதிரடியாக பேசினார்.