இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு: அண்ணா பல்கலை

 

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு: அண்ணா பல்கலை

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டன. செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற்றது. பல்கலைக்கழகங்களில் வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுகள் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு: அண்ணா பல்கலை

இந்நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்டார்களா? என்ற விசாரணைக்கு பிறகு அவர்களது தேர்வு முடிவுகள் பின்பு வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.