‘விடுதிகளை காலி செய்யுங்கள்’.. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் கடிதம்!

 

‘விடுதிகளை காலி செய்யுங்கள்’.. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் கடிதம்!

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தட்டுப்பாடு நிலவுவதால் அரசு கட்டிடங்கள், பள்ளி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மருத்துவ முகாம் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக குறிப்பிட்ட காலக்கட்டததிற்குள் அண்ணா பல்கலைக்கழக விடுதியை ஒப்படைக்குமாறு மாநகராட்சி ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

‘விடுதிகளை காலி செய்யுங்கள்’.. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் கடிதம்!

அதற்கு அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா, மாணவர்களின் உடைமைகள் அனைத்தும் இருப்பதால் விடுதியை கொரோனா சிகிச்சைக்கு தர முடியாது என்றும் அதற்கு பதிலாக ஆடிட்டோரியம் தருவதாகவும் கூறினார். ஆனால் அதற்கு சென்னை மாநகரட்சி ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு விடுதியை அளிக்க அண்ணா பல்கலைக் கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. அதனால் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.