கொரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர்

 

கொரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர்

சென்னை: கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணாநகர் துணை ஆணையாளர் பணிக்கு திரும்பினார்.

சென்னை அண்ணாநகர் துணை ஆணையாளர் மற்றும் ஓரிரு போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதி ஆனது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சை முடித்து அண்ணாநகர் துணை ஆணையாளர் இன்று பணிக்கு திரும்பினார். அவரை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

கொரோனா சிகிச்சையில் இருந்தபோது காவல்துறையினர் பக்கபலமாக இருந்ததாகவும், காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து தன்னை பார்த்துக் கொண்டதாகவும் அண்ணாநகர் துணை ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.