அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!

 

அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திராவிட கழகத்தைத் தோற்றுவித்த அண்ணா தமிழகத்தில் 6வது முதல்வர் என்ற பெருமைக்குரியவர். திராவிட சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற இவர் சீர்திருத்த திருமணம், இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்தி விட்டு சென்றனர்.பல உயரிய கோட்பாடுகளை தன்னுள் வைத்திருந்த அண்ணா கடந்த 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!

இந்நிலையில் அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னையில் அமைதி பேரணி நடத்தினர். வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி சென்ற பேரணியில் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!

இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி. ஆ. ராசா, எம்.பி.டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.