அனிதா எவிக்‌ஷனா? நன்றி தெரிவித்த ட்விட்டர் ஐடி – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

 

அனிதா எவிக்‌ஷனா? நன்றி தெரிவித்த ட்விட்டர் ஐடி – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

பிக்பாஸ் 4 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று இந்த சீசனின் 83-வது நாள் இன்று கமல்ஹாசன் வரும் எப்பிசோட். அதனால், பல பஞ்சாயத்துகள் பேசப்படும். அத்தோடு எவிக்‌ஷனும் நடக்கும்.

இதுவரை பிக்பாஸில் ரேகா, வேல்முருகன், ஷனம், சம்யுக்தா, அர்ச்சனா, நிஷா, சுசித்ரா, சுரேஷ் உள்ளிடோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 9 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அதில் இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில், கேபிரியல்லா, ஆஜித், ஆரி, அனிதா, ஷிவானி ஆகியோர் இருக்கிறார்கள்.

அனிதா எவிக்‌ஷனா? நன்றி தெரிவித்த ட்விட்டர் ஐடி – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இவர்களில் யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் ஆரிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் பெருகி விட்டது. அதனால், அவரை வெறுப்பேற்றும் விதத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் யார் நடந்துகொண்டாலும் அவருக்கு எதிராக ஓட்டுகள் போடுவதை ஆரியின் ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை வெளியாகும் நபர் யார் என்பது குறித்த சோஷியல் மீடியாவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதில் அனிதாவின் பெயரே அதிகம் அடிபடுகிறது. அதுவும், இந்த வாரத்தில் ஆரியுடன் கடுமையாக மோதினார் அனிதா. அதனால், ஆரியின் ரசிகர்கள் அனிதாவைக் கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அனிதா எவிக்‌ஷனா? நன்றி தெரிவித்த ட்விட்டர் ஐடி – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இன்று மதியம் அனிதாவின் ட்விட்டர் பக்கத்தில்  ‘Thanks for everything’ என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த நன்றி எதற்காக என்ற கேள்வி எழுந்தது. ஒன்று, வாக்களித்து காப்பாற்றியதர்கு நன்றியாக இருக்க வேண்டும். இரண்டாவது இதுவரை காப்பாற்றிய ரசிகர்களுக்கான நன்றியாக இருக்க வேண்டும். அப்படியெனில், அனிதா வெளியேற்றப்படுவது உறுதியாகி விட்டதா என்று கமெண்டில் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

விஜய் டிவியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதபோது இப்படி ட்விட் போட்டதற்கு விஜய் டிவி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

இன்னும் சில அனிதாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அனிதாவா வெளியேற்றப்பட இருக்கிறாரா… இல்லை போட்டியில் நீடிக்கப் போகிறாரா என்பதை இன்றிரவு ஓரளவு யூகிக்க முடியும். ஏனெனில், நாமினேஷனில் உள்ளவர்களில் இருவர் காப்பாற்றப்படுவார்கள். அவர்களில் அனிதா இல்லையெனில், நாளை வெளியேற்றப்படுவது உறுதியாகலாம்.