“அழகா இருந்த வேலைக்காரி மீது ஆத்திரப்பட்ட முதலாளியம்மா ..” -பொறாமையால் கத்தியால் குத்திய கொடுமை …

 

“அழகா இருந்த வேலைக்காரி மீது ஆத்திரப்பட்ட முதலாளியம்மா ..” -பொறாமையால் கத்தியால் குத்திய கொடுமை …

பீகாரைச் சேர்ந்த 25 வயதான பிரிதிகுமாரி ராம், கடந்த நான்கு ஆண்டுகளாக அகமதாபாத்தின் வாஸ்னா பகுதியில் சாந்தனு சிங் மற்றும் கல்யாணி தம்பதிகளின் இல்லத்தில் வீட்டு உதவியாளராக வீட்டு வேலைகள் செய்து வந்தார் .அவர் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாக இருப்பாராம் .இதனால் அந்த முதலாளியம்மா கல்யாணி எந்நேரமும் அவரின் வேலையில் குறை சொல்லிக்கொண்டே இருப்பாராம் ,
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரிதிகுமாரி வீட்டை பெருக்கி கொண்டிருந்தார் ,அப்போது அங்கு வந்த கல்யாணி அவர் பெருக்குவதை பார்த்து ஒழுங்காக குப்பையில்லாமல் பெருக்கு ,வீடெல்லாம் குப்பையா இருக்கு என்றார்
பிறகு அவர் பாத்திரம் கழுவியபோது அங்கு வந்த கல்யாணி அதையும் குறை சொன்னார்.பிறகு அவர் வீடு துடைத்த போது அங்கு வந்த கல்யாணி அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார்

“அழகா இருந்த வேலைக்காரி மீது ஆத்திரப்பட்ட முதலாளியம்மா ..” -பொறாமையால் கத்தியால் குத்திய கொடுமை …
இதனால் அவர் குத்துவதை தடுக்க முற்பட்ட பிரிதிக்குமாரிக்கு உடம்பெல்லாம் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து அலறியபடி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார் .அப்போது அந்த காட்சியை பார்த்த சிலர் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டதும் விரைந்து வந்த போலீசார், கல்யாணியிடம் விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் .

“அழகா இருந்த வேலைக்காரி மீது ஆத்திரப்பட்ட முதலாளியம்மா ..” -பொறாமையால் கத்தியால் குத்திய கொடுமை …
FIR (Photo: IANS)