திருச்சி- எச்சரித்தும் மகளிடம் பழகியதால் ஆத்திரம்! கண்டிக்காத வாலிபரின் தந்தை குத்திக்கொலை!

 

திருச்சி- எச்சரித்தும் மகளிடம் பழகியதால் ஆத்திரம்! கண்டிக்காத வாலிபரின் தந்தை குத்திக்கொலை!

மகளிடம் இனி பழகக்கூடாது என்று எச்சரித்தும் பழகி வந்ததால், இதை தடுத்த நிறுத்ததால் வாலிபரின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
 
திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள சுண்ணாம்புகாரத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மகன் கணேசன் என்ற பார்த்தீபன் (48).  தனியார் கார் டிரைவரான பார்த்திபனுக்கு ஆகாஷ் என்ற 20 வயது மகன் உள்ளார். ஆகாஷ் 10 ம் வகுப்பு வரை படித்து விட்டு  பொறுப்பற்றவனாக திரிந்துள்ளார். அதே பகுதியில் உள்ள வளையல்காரத் தெருவைச்  சேர்ந்த சுந்தரம் மகன் முக்காடு குமார் என்ற செல்வகுமார்  (40). இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு  ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

திருச்சி- எச்சரித்தும் மகளிடம் பழகியதால் ஆத்திரம்! கண்டிக்காத வாலிபரின் தந்தை குத்திக்கொலை!


   இவரது மகள் தர்ஷினி,திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஆகாஷ் , தர்ஷினியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தான். இருப்பினும் தர்ஷினியின் தந்தை முக்காடு குமார் ஆகாஷ் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் தர்ஷினியிடம் பேசுவதனை ஆகாஷ் நிறுத்தவும் இல்லை, இதனை பார்த்திபன் கண்டிக்கவும்  இல்லை.

திருச்சி- எச்சரித்தும் மகளிடம் பழகியதால் ஆத்திரம்! கண்டிக்காத வாலிபரின் தந்தை குத்திக்கொலை!


     இதனால் ஆத்திரமடைந்த முக்காடுகுமார், இன்று மாலை லால்குடி கொடிக்காத்தெருவில் உள்ள மாரியம்மன்கோயில் பகுதியில் சென்ற அவரை  முக்காடுகுமார் அவரது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பாம்புநாகராஜ் ஆகிய இருவரும் வழி மறித்து கத்தியால் குத்த முயன்றனர். தப்பியோடிய பார்த்திபனை தொடர்ந்து பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற இருவரும் பார்த்திபனை கழுத்து மற்றும் வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடினார்கள்.

   இந்தசம்பவத்தில் பார்த்திபன்   லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே  உயிரிழந்தார். தப்பியோடிய இருவரையும் லால்குடி போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் லால்குடி மருத்துவமனையில் போலீஸார் அதிகளவில் குவிக்கபட்டதால், அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.