ஓடும் பேருந்தில் இருந்து, தவறி விழுந்து ஆந்திர மாநில பெண் பலி!
தூத்துக்குடி
திருச்செந்தூர் அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆந்திர மாநில பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பகுதியை சேர்ந்தவர் சாந்தபெண்ணா. இவரது மகள் ஜாய் (58). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வட்டம் நாலுமாவடி பகுதிக்கு ஜெப ஊழியத்திற்காக வந்திருந்தார். தொடர்ந்து, தான் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதற்காக, தனியார் பேருந்து ஒன்றில் ஏற முயன்றார்.
அதற்குள்ளாக, ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் படியில் இருந்து ஜாய் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை ஜாய் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, நசரேத் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் அலெக்ஸ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.