ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு

 

ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஒரேநாளில் அதிகம் பேருக்கு கொரோனா பாதித்த எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது. அனந்தபூர் மற்றும் கர்னூலில் தலா இரண்டு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 6,456 ஆகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை 86 ஆகவும் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 15,173 பேரின் மாதிரிகள் கொரோனாவுக்காக பரிசோதிக்கப்பட்டன. அதில் 246 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களில் 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களிடையே 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை இப்போது 3,385 ஆக உள்ளது.