தமிழ்நாட்டை முந்தும் ஆந்திரா… இன்று 8,732 பேருக்கு கொரோனா!

 

தமிழ்நாட்டை முந்தும் ஆந்திரா… இன்று 8,732 பேருக்கு கொரோனா!

2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று அறியப்பட்டது. அது நாளடைவில் உலகம் முழுவது பரவத் தொடங்கி விட்டது, கொரோனா நோய்த் தொற்றல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தொடக்கத்தில் ஆந்திராவில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதும் அம்மாநில அரசு உஷாரானது. உடனே களத்தில் இறங்கி பாதுகாப்பு அம்சங்களை விரைவு படுத்தியது. அதனால், ஆந்திராவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது கொரோனா. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆந்திராவிலும் கோரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் உயர்ந்துவருகிறது.

தமிழ்நாட்டை முந்தும் ஆந்திரா… இன்று 8,732 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,81,817 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500ஐ நெருங்கியுள்ளது. ஆந்திராவில் கொரோனாவிலிருந்து 10,414 பேர் குணமடைந்த நிலையில் 88,138 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த மாதம் வரை ஆந்திராவில் கொரோனா குறைவாக இருந்த நிலையில் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால் தொற்றுகளை கண்டறிவதும் அதிகரித்துள்ளது.