ஆந்திராவில் ஒரே நாளில் 10ஆயிரம் பேருக்கு கொரோனா

 

ஆந்திராவில் ஒரே நாளில் 10ஆயிரம் பேருக்கு கொரோனா

2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று அறியப்பட்டது. அது நாளடைவில் உலகம் முழுவது பரவத் தொடங்கி விட்டது, கொரோனா நோய்த் தொற்றல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆந்திராவில் ஒரே நாளில் 10ஆயிரம் பேருக்கு கொரோனா

தொடக்கத்தில் ஆந்திராவில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதும் அம்மாநில அரசு உஷாரானது. உடனே களத்தில் இறங்கி பாதுகாப்பு அம்சங்களை விரைவு படுத்தியது. அதனால், ஆந்திராவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது கொரோனா. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக ஆந்திராவிலும் கோரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் உயர்ந்துவருகிறது. ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,20,390-ஆக உயர்ந்துள்ளது. 63,771 பேர் குணமடைந்த நிலையில், 55,406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 1213 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.