ஆந்திரா- ஓடும் கார் தீ பிடித்து எரிந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
ஆந்திரா- விசாகப்பட்டினம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் எச்சரிக்கையால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு காரில் சிம்மாசலம் புறப்பட்டனர்.
https://t.co/DHcU7c3JIS#AndhraPradesh #carcaughtfire pic.twitter.com/UoCE8Ku8E3
— Top Tamil News (@toptamilnews) August 31, 2020
நகரில் கோபாலப்பட்டினம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது முன் பகுதியில் லேசான புகை வர ஆரம்பித்ததால் ஓட்டுநர் எச்சரிக்கையுடன் வாகனத்தை
நிறுத்தினார் உடனடியாக காருக்குள் இருந்த பயணிகள் வெளியேறிய நிலையில் கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது இது ஒரு தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது என படையினர் காரில் இருந்த தீயை அணைத்தனர். ஓட்டுனரின் எச்சரிக்கையால் அதில் பயணித்த பயணிகள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.