“யாரும் பிரித்து விட கூடாது” : பள்ளி வகுப்பறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட 2k கிட்ஸ் !

 

“யாரும் பிரித்து விட கூடாது” : பள்ளி வகுப்பறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட 2k கிட்ஸ் !

பள்ளி வகுப்பறையிலேயே மாணவன், மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“யாரும் பிரித்து விட கூடாது” : பள்ளி வகுப்பறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட 2k கிட்ஸ் !

ஆந்திராவில் கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சூழலில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவியை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

“யாரும் பிரித்து விட கூடாது” : பள்ளி வகுப்பறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட 2k கிட்ஸ் !

கொரோனா ஊரடங்கால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியயாமல் தவித்து வந்த இந்த காதல் ஜோடிக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது நற்செய்தியாக வந்து சேர்ந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் அந்த மாணவர், தனது காதலிக்கு தாலி கட்டியுள்ளார் . இதை மற்றொரு மாணவன் செல்போனில் படம் பிடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இருவரும் பிரிந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற செயல் நடக்கக்கூடாது என்பதற்காக இவர்கள் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பள்ளி முதல்வர் மூவரையும் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.