ஏழுமலையானுக்கு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்த ஆந்திர முதல்வர்!
Sep 24, 2020, 07:57 IST1600914454000
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் விழாவையொட்டி ஏழுமலையானுக்கு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. 27ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரமோற்சவத்தில் ஏழுமலையானுக்கு வஸ்திரம் சமர்ப்பித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
பாரம்பரிய முறைப்படி வஸ்திரங்களைத் தலையில் சுமந்து வந்த அவருக்குத் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நடிகை ரோஜா, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கருட சேவையில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.