“10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்ல… காஞ்ச மாடு கம்பில் மேய்ந்ததுபோல மேய்ந்து விடுவார்கள்”

 

“10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்ல… காஞ்ச மாடு கம்பில் மேய்ந்ததுபோல மேய்ந்து விடுவார்கள்”

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே அரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத் குமாரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “திமுக கட்சி நிர்வாகிகள் தங்களுடைய கட்சியிலேயே மரியாதை இல்லை என புலம்பிக் கொண்டுள்ளனர். திமுக என்றால் ஒரு குடும்பம் தான், அது கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி, அது ஒரு குடும்பம். ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவைகள் நன்றாக உள்ளது. தமிழகம் மிகவும் அமைதி பூங்காவாக உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு நடைபெற்றன.

“10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்ல… காஞ்ச மாடு கம்பில் மேய்ந்ததுபோல மேய்ந்து விடுவார்கள்”

10 ஆண்டுகளாக திமுகவினர் ஆட்சியில் இல்லாததால் காஞ்ச மாடு கம்பில் மேய்ந்தது போல மேய்ந்து விடுவார்கள். ஸ்டாலின் என்றால் பொய், அவர் ஒரு புளுகு மூட்டை, பொய்யை அள்ளி வீசுவார் ஆனால் எதுவுமே செய்ய மாட்டார். எனவே அரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமாருக்கு ஆதரவளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்