அந்த அறையை என் மாமியாருக்கு ஒதுக்குவேன்.. கதை முடிந்தது… வைரலான ஆனந்த் மகிந்திராவின் டிவிட்…

 

அந்த அறையை என் மாமியாருக்கு ஒதுக்குவேன்.. கதை முடிந்தது… வைரலான ஆனந்த் மகிந்திராவின் டிவிட்…

மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான மகிந்திரா குழுமத்தை கட்டி காக்கும் ஆனந்த் மகிந்திரா மிகவும் வித்தியாசமானவர் மற்றும் மிகவும் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர். எவ்வளவு பணிகள் இருந்தாலும் டிவிட்டரில் மிகவும் பரபரப்பாக இருப்பவர். தன்னை பின்தொடருபவர்கள் கூறும் எந்தவொரு ஆலோசனைகளையும் சிறிது அளவும் ஈகோ இல்லாமல் ஏற்று கொள்பவர். மேலும் தன்னை ஆச்சரியப்படுத்திய தகவல்களையும் தவறாமல் டிவிட்டரில் பதிவு செய்து விடுவார். இதனால் இவருக்கு என்றே டிவிட்டரில் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த அறையை என் மாமியாருக்கு ஒதுக்குவேன்.. கதை முடிந்தது… வைரலான ஆனந்த் மகிந்திராவின் டிவிட்…
ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா நேற்றுமுன்தினம் டிவிட்டரில் பார்த்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் புகைப்படத்தை போஸ்ட் செய்து இருந்தார். அந்த புகைப்படம் ஒரு மாடி அறையின் வாசல் பகுதி படம். படி ஏறி அந்த அறைக்குள் செல்வதும், அறையிலிருந்து வெளியே இறங்கி வருவதும் சிரமமாக இருக்கும். அந்த படத்தை பார்த்ததும் நமக்கு, யாருடா அந்த புத்திசாலி என்ஜினீயர், அவரை நாமே பார்த்தே ஆகணும் என்ற எண்ணம் ஏற்படும்.

அந்த அறையை என் மாமியாருக்கு ஒதுக்குவேன்.. கதை முடிந்தது… வைரலான ஆனந்த் மகிந்திராவின் டிவிட்…
மாடி அறையின் வாசல் பகுதி

ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, திங்கள் சிரிப்புடன் முடிந்தது. முதலில் நான் இந்த படத்தை தலைப்பு இல்லாமல் பெற்றேன். நான் மற்றொரு தலைப்பு போட்டிக்கு சென்றேன். அப்புறம் மற்றொரு நண்பர் வாயிலாக தலைப்புடன் அதனை பெற்றேன். என்னுடைய மாமியாருக்கு அந்த அறையை நான் ஒதுக்குவேன். கதை முடிந்தது என பதிவு செய்து இருந்தார். ஆனந்த் மகிந்திராவின் அந்த டிவிட் டிவிட்டரில் வைரலானது. ஆனந்த் மகிந்திராவை டிவிட்டரில் பின்தொடருபவர்கள் வித்தியாசமான பதிலை பதிவு செய்து இருந்தனர். அந்த சிவில் என்ஜினீயர் ஆன்லைன் கிளாஸில் பட்டம் பெற்று இருப்பார் என ஒருவர் பதிவு செய்து இருந்தார்.