தூக்கமின்மையால் விபரீதம்… அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி!

 

தூக்கமின்மையால் விபரீதம்… அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி!

தேனி

தேனி அருகே தூக்கம் வராததால் அளவிற்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க வாசகன். இவரது மனைவி சாந்தி (58). இவருக்கு சரிவர தூக்கம் வராததால், மருத்துவரின் ஆலோசனை பேரில் நாள்தோறும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு மாத்திரை போட்டும் தூக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.

தூக்கமின்மையால் விபரீதம்… அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி!

இதனால், அவர் அளவிற்கு அதிகமாக மாத்திரையை விழுங்கிய நிலையில், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சாந்தியை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து சாந்தியின் மகன் கோகுள் அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தூக்கம் வராததால் அளவிற்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பழனிசெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.