திருப்பரங்குன்றம் கோயில் குளத்தில் மூழ்கி முதியவர் பலி

 

திருப்பரங்குன்றம் கோயில் குளத்தில் மூழ்கி முதியவர் பலி

மதுரை

திருப்பரங்குன்றம் கோயில் குளத்தில் குளித்த 70 வயது முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்படட திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). இவர் இன்று காலை, தனது உறவினர்களுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு குளிக்கச் சென்றார். அங்கு நீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீரில் மூழ்கி மாயமாகினார்.

திருப்பரங்குன்றம் கோயில் குளத்தில் மூழ்கி முதியவர் பலி

இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து, சடலத்தை மீட்ட திருப்பரங்குன்றம் போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கோயில் குளத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.