7வயது சிறுமியை 10 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்

 

7வயது சிறுமியை 10 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த  முதியவர்

7 வயது சிறுமியை பத்து நாட்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஐம்பத்தி ஒரு வயது முதியவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்

7வயது சிறுமியை 10 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த  முதியவர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை பகுதியில் வசித்து வரும் 51 வயது அந்த முதியவர் அதே பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமியை தினமும் சாக்லெட் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

சிறுமியின் உடலிலும், நடத்தையிலும் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட தாய் மகளிடம் துருவித்துருவி விசாரிக்க அவர் நடந்தவற்றைச் சொல்லி அழுதிருக்கிறார். இதை அடுத்து அந்த தாய், முதியவர் மீது போலீசில் புகார் அளித்து விட்டார் அந்த தாய்.

இதையடுத்து ஐபிசி பிரிவு354 மற்றும் போக்சோ சட்டத்தில் 4,8, 12 ஆகிய பிரிவுகளின் கீழும் அந்த முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.