சிகிச்சை, உணவு இல்லை! தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த முதியவர் தற்கொலை முயற்சி…

 

சிகிச்சை, உணவு இல்லை! தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த முதியவர் தற்கொலை முயற்சி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது இதுவரை 82 ஆயிரத்து 275 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சென்னையை பொருத்தவரையில் 53 ஆயிரத்து 762 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களாக மதுரையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

சிகிச்சை, உணவு இல்லை! தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த முதியவர் தற்கொலை முயற்சி…
இந்நிலையில் மதுரை தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த முதியவர் 2ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்துதல் முகாமில் உரிய சிகிச்சை,உணவு வழங்கவில்லை எனக்கூறி தற்கொலை முயற்சித்ததாக கூறப்படுகிறது.