ஈரோட்டில் 16 ஆம் தேதி விஜய் பொதுக்கூட்டம் - செங்கோட்டையன்
ஈரோட்டில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு, கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு S.P அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ஈரோட்டில், வரும் 16.ம் தேதி விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பெருந்துறை சாலையில் வாரி மஹால் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடத்தில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது அதற்கு உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் விரைந்து நடக்க நடத்தப்படும். அரசு என்ன விதிமுறைகள் சொல்கிறார்களோ அதை நிறைவு செய்து வெற்றிகரமாக நிகழ்ச்சி நடத்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். ரோட் ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது தனியார் இடத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எதிர்கால தமிழகத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தி விஜயை அரியணையில் அமர்த்தும்.
தவெக.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதா? இதைப்பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் மற்றொரு கட்சியை பற்றி நாங்கள் சொல்ல முடியாது. வெற்றி கழகத்தை பார்வையிட்டு சென்று இருக்கிறார்கள். தமிழகம் திருப்புமுனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது பெரிய மாற்றம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப கூட்டத்தில் நபர்கள் கலந்து கொள்வார்கள்” என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் தவெக.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா.? பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கூட்டணியில் அமமுக சேர வாய்ப்பு உள்ளதா? ஒவ்வொரு இயக்கங்களும் தன் கொள்கை ரீதியாக பயணம் மேற்கொண்டு உள்ளார்கள் அவரவர்கள் நல்ல இயக்கத்தோடு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற நல்ல மனதோடு தமிழக கட்சி கழக தலைவர் வரும்பொழுது ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புகள் உள்ளன. தவெகவின் இணையும்போது எந்த நிபந்தனையும் நான் விதிக்கவில்லை. என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை, நிபந்தனை விதித்து யாரும் சேர முடியாது மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்றார்.